குர்ஆனின் போதனைகள்
இறை நம்பிக்கையும், நற்செயல்களும்
நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! 2-25
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது. 17-9
எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம். 21-94
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். 19-96
எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. 22-50
எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான். 65-11
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்)கூலி கொடுக்கிறான். 30-45
எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக. 18-110
எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். 25-71
எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் வெற்றியடைந்தோரில் ஆவார்கள். 28-67
எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான். 3-57
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள். 98-7
Source from: www.readislam.net
இஸ்லாத்தைப் பற்றிய ஐயங்களும் தெளிவுகளும்
(நபியே! அவர்களிடம்) 'வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்¢ (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்¢ அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்¢ அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்¢ (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். இம்ரானின் சந்ததிகள் (3:64)
Monday, March 5, 2007
அச்சமும் துக்கமும் இல்லாதவர்கள் யார்?

குர்ஆனின் நற்போதனைகள்
அச்சமும் துக்கமும் இல்லாதவர்கள் யார்?
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10-62
எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 46-13
யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." 2-38
எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். 7-35
நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 6-48
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 5-69
எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-112
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-274
Source from: www.readislam.net
தடைகள் (Breaks)
தடைகள் (பிரேக்)
ஒரு இலக்கை சென்றடைவதற்கு பயணிக்கும் ஒரு வண்டி 120 கி.மீ. வேகத்தில் செல்லும் போது தீடிரென்று எதிர்ப்படும் வேகத்தடையைப் பார்த்து நீதானமிழந்து திக்குமுக்காடி போகிறது. அதை சமாளித்து தப்பி பிழைப்போரும் உண்டு. அத்துடன் தங்கள் ஓட்டத்தை முடித்துக் கொள்வோரும் உண்டு.
மனித வாழ்வையும் ஒரு வண்டிக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எப்படி ஒரு வண்டியை ஓட்டும் போது வேகத்தடைகளும், அதை தொடர்ந்து பிரேக்குகளும் எவ்வளவு அவசியமோ அதுபோல மனித வாழ்விலும் பிரச்சனைகளும், துன்பங்களும் ஏற்படும் போது அதை தொடர்ந்து சில உடல் சோர்வுகளும், மன உளைச்சல்களும் ஏற்படத் தான் செய்யும். இதிலிருந்து எந்த மனிதனுக்கும் விதிவிலக்கு கிடையாது. ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் மனிதன் எதிர்ப்படும் இன்னல்களை கண்டு அத்துடன் தன் பயணத்தை முடித்துக் கொள்வானேயானால் அவனால் இலக்கை ஒரு போதும் அடைய முடியாது.
அதே நேரத்தில் இலக்கை அடைய வேண்டுமே என்பதற்காக அதிவேகமான கட்டுபாடு இல்லாத பயணத்தினால் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி அத்துடன் அவன் பயணம் தடைப் பட்டுவிடுகிறது. வாழ்வினில் இவ்வாறு பயணம் செய்யும் போது இலட்சியவாதி கவனமாக தன் அடிகளை எடுத்து வைக்க வேண்டியுள்ளது.
இதனை தான் உமர் (ரலி) அவர்கள் விளக்கினார்கள். அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இவ்வுலகில் ஒரு முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டும்"". அதற்கு அவர் ''கரடுமுரடான, முட்கள் நிறைந்த பாதையிலே எவ்வாறு எச்சரிக்கையுடன் ஒருவன் தன் காலடிகளை எடுத்து வைப்பானோ, அவ்வாறு ஒரு முஸ்லிம் இவ்வுலகில் தன் வாழ்க்கை எச்சரிக்கையுடன் தொடர வேண்டும""; என்றார்கள்.
ஆக இவ்வாறு பயணிக்கும் ஒரு முஸ்லிம் தன் பயணத்தை மிக கவனமாக எடுத்து வைப்பதால் தடைகள் வரும்போது உடன் அவனால் சமாளிக்க முடிகிறது. ஆனால் ஒரு நிராகரிப்பாளளோ அல்லது பலகீனமான முஸ்லமோ தடைகள் ஏற்பட்டவுடன் அதற்குள் விழுந்து, சிக்கி கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் தத்தழித்து அவன் வாழ்வும் அத்துடன் முடிந்துவிடுகிறது.
சரி இன்றிலிருந்து நான் சீரான வேகத்துடன் தான் பயணம் செய்வேன் அதனால் எனக்கு பிரேக் உள்ள வண்டி தேவையில்லை என்றும் அடம் பிடிக்க வும் கூடாது. ஏனென்றால் நாம் அவ்வாறு சென்றாலும் எதிரில் வரக் கூடியவர்களாலோ அல்லது சிலநேரங்களில் நம்முடைய அலட்சியத்தினாலோ வண்டி தடுமாறலாம் அந்த நேரத்தில் கண்டிப்பாக பிரேக் அவசியப்படும்;.
இதை அல்லாஹ{வை யுடைய தூதர் (ஸல்) அவர்கள் அழகாக விளக்கினார்கள்.
"ஒரு முஃமீன் காற்றடித்தால் சாயும் ஒரு புல்லைப் போன்றவன். அது காற்றடித்தால் சிறிது வளைந்து பின் நிமிர்ந்து விடும். ஆனால் ஒரு நிராகரிப்பாளன் ஒரு மரத்திற்கு ஒப்பாவான். ஒரு பெரும் காற்று அதனை வேறோடு பெயர்த்துவிடுகிறது என்றார்கள்."
முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் (பிரேக்கின்) போது சிறுது பிரேக் கட்டையை அழுத்தி விட்டு மீண்டும் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விடுவான். அடுத்து ஏற்படும் இன்னொரு வேகத்தடையில்; பிரேக் கட்டைக்கு இன்னொரு அழுத்து. இவ்வாறாக தன் பயணத்தை தொடர்ந்து செலுத்தி இனிதே முடித்து விடுவான்.
ஆனால் ஒரு இறைநம்பிக்கையற்றவரோ அல்லது இறைநம்பிக்கையில் பலகீனமானவரோ வண்டியை அங்கே நிறுத்தி விட்டு, அய்யோ இந்த தடையை தாண்ட முடியாதப்பா என்று பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடிப்பார்கள்.
மனித வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்களை இந்த பிரேக்கின் இரகசியம் அறிந்தவர்கள் சமாளித்து விடுகிறார்கள். அதற்கேற்றப்போல் வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டி வெற்றி பெறுகிறார்கள். பூமியில் அல்லாஹ் அமைத்து கொடுத்த வாழ்வை வெற்றியுடன் சமாளித்து சுவனம் எனும் இலட்சியத்தை அடைந்து விடுகிறார்கள்.
இந்த இடத்தில் இன்றையும் கவனிக்க வேண்டும். ஆக வண்டியை ஓட்டுவதில் இவ்வளவு பிரச்சனைகள் உண்டா? என்று நினைத்து வண்டியை ஓட்டாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது. ஏனென்றால் அன்றாடம் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் வண்டியை ஓட்டுபவரின் எண்ணிக்கை கூட தான் செய்கிறதே ஒழிய குறையவில்லை என்பதையும் மனத்தில் இருத்தி கொள்ள வேண்டும்.
இதேபோன்று வாழ்க்கையில் எதிர்ப்படும் எந்த துன்பங்கள் ஆனாலும் சீரான வேகத்தில் செல்லும் மனிதர்கள் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும் போது சற்று சோர்வு ஏற்பட்டாலும் திரும்ப எழுந்து விடுகிறார்கள். ஆனால் முன்னர் கூறியது போன்று அதிவேகத்தில் செல்லக் கூடிய ஒரு வாகனத்தை எதிர்பாராத விதமாக சந்திக்கும் இத்தகைய தடைகள் மூலமாக முழுமையாக பழுதடைதலை போல வாழ்க்கை எனும் வண்டியில் பயணம் செய்யும் மனிதர்கள் பலர் அதிவேகமாக பயணம் செய்து எதிர்ப்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை எடுக்க முடியாமல் தோல்வியை சந்திக்கிறார்கள்.
ஒரு இலக்கை சென்றடைவதற்கு பயணிக்கும் ஒரு வண்டி 120 கி.மீ. வேகத்தில் செல்லும் போது தீடிரென்று எதிர்ப்படும் வேகத்தடையைப் பார்த்து நீதானமிழந்து திக்குமுக்காடி போகிறது. அதை சமாளித்து தப்பி பிழைப்போரும் உண்டு. அத்துடன் தங்கள் ஓட்டத்தை முடித்துக் கொள்வோரும் உண்டு.
மனித வாழ்வையும் ஒரு வண்டிக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எப்படி ஒரு வண்டியை ஓட்டும் போது வேகத்தடைகளும், அதை தொடர்ந்து பிரேக்குகளும் எவ்வளவு அவசியமோ அதுபோல மனித வாழ்விலும் பிரச்சனைகளும், துன்பங்களும் ஏற்படும் போது அதை தொடர்ந்து சில உடல் சோர்வுகளும், மன உளைச்சல்களும் ஏற்படத் தான் செய்யும். இதிலிருந்து எந்த மனிதனுக்கும் விதிவிலக்கு கிடையாது. ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் மனிதன் எதிர்ப்படும் இன்னல்களை கண்டு அத்துடன் தன் பயணத்தை முடித்துக் கொள்வானேயானால் அவனால் இலக்கை ஒரு போதும் அடைய முடியாது.
அதே நேரத்தில் இலக்கை அடைய வேண்டுமே என்பதற்காக அதிவேகமான கட்டுபாடு இல்லாத பயணத்தினால் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி அத்துடன் அவன் பயணம் தடைப் பட்டுவிடுகிறது. வாழ்வினில் இவ்வாறு பயணம் செய்யும் போது இலட்சியவாதி கவனமாக தன் அடிகளை எடுத்து வைக்க வேண்டியுள்ளது.
இதனை தான் உமர் (ரலி) அவர்கள் விளக்கினார்கள். அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இவ்வுலகில் ஒரு முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டும்"". அதற்கு அவர் ''கரடுமுரடான, முட்கள் நிறைந்த பாதையிலே எவ்வாறு எச்சரிக்கையுடன் ஒருவன் தன் காலடிகளை எடுத்து வைப்பானோ, அவ்வாறு ஒரு முஸ்லிம் இவ்வுலகில் தன் வாழ்க்கை எச்சரிக்கையுடன் தொடர வேண்டும""; என்றார்கள்.
ஆக இவ்வாறு பயணிக்கும் ஒரு முஸ்லிம் தன் பயணத்தை மிக கவனமாக எடுத்து வைப்பதால் தடைகள் வரும்போது உடன் அவனால் சமாளிக்க முடிகிறது. ஆனால் ஒரு நிராகரிப்பாளளோ அல்லது பலகீனமான முஸ்லமோ தடைகள் ஏற்பட்டவுடன் அதற்குள் விழுந்து, சிக்கி கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் தத்தழித்து அவன் வாழ்வும் அத்துடன் முடிந்துவிடுகிறது.
சரி இன்றிலிருந்து நான் சீரான வேகத்துடன் தான் பயணம் செய்வேன் அதனால் எனக்கு பிரேக் உள்ள வண்டி தேவையில்லை என்றும் அடம் பிடிக்க வும் கூடாது. ஏனென்றால் நாம் அவ்வாறு சென்றாலும் எதிரில் வரக் கூடியவர்களாலோ அல்லது சிலநேரங்களில் நம்முடைய அலட்சியத்தினாலோ வண்டி தடுமாறலாம் அந்த நேரத்தில் கண்டிப்பாக பிரேக் அவசியப்படும்;.
இதை அல்லாஹ{வை யுடைய தூதர் (ஸல்) அவர்கள் அழகாக விளக்கினார்கள்.
"ஒரு முஃமீன் காற்றடித்தால் சாயும் ஒரு புல்லைப் போன்றவன். அது காற்றடித்தால் சிறிது வளைந்து பின் நிமிர்ந்து விடும். ஆனால் ஒரு நிராகரிப்பாளன் ஒரு மரத்திற்கு ஒப்பாவான். ஒரு பெரும் காற்று அதனை வேறோடு பெயர்த்துவிடுகிறது என்றார்கள்."
முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் (பிரேக்கின்) போது சிறுது பிரேக் கட்டையை அழுத்தி விட்டு மீண்டும் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விடுவான். அடுத்து ஏற்படும் இன்னொரு வேகத்தடையில்; பிரேக் கட்டைக்கு இன்னொரு அழுத்து. இவ்வாறாக தன் பயணத்தை தொடர்ந்து செலுத்தி இனிதே முடித்து விடுவான்.
ஆனால் ஒரு இறைநம்பிக்கையற்றவரோ அல்லது இறைநம்பிக்கையில் பலகீனமானவரோ வண்டியை அங்கே நிறுத்தி விட்டு, அய்யோ இந்த தடையை தாண்ட முடியாதப்பா என்று பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடிப்பார்கள்.
மனித வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்களை இந்த பிரேக்கின் இரகசியம் அறிந்தவர்கள் சமாளித்து விடுகிறார்கள். அதற்கேற்றப்போல் வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டி வெற்றி பெறுகிறார்கள். பூமியில் அல்லாஹ் அமைத்து கொடுத்த வாழ்வை வெற்றியுடன் சமாளித்து சுவனம் எனும் இலட்சியத்தை அடைந்து விடுகிறார்கள்.
இந்த இடத்தில் இன்றையும் கவனிக்க வேண்டும். ஆக வண்டியை ஓட்டுவதில் இவ்வளவு பிரச்சனைகள் உண்டா? என்று நினைத்து வண்டியை ஓட்டாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது. ஏனென்றால் அன்றாடம் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் வண்டியை ஓட்டுபவரின் எண்ணிக்கை கூட தான் செய்கிறதே ஒழிய குறையவில்லை என்பதையும் மனத்தில் இருத்தி கொள்ள வேண்டும்.
இதேபோன்று வாழ்க்கையில் எதிர்ப்படும் எந்த துன்பங்கள் ஆனாலும் சீரான வேகத்தில் செல்லும் மனிதர்கள் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும் போது சற்று சோர்வு ஏற்பட்டாலும் திரும்ப எழுந்து விடுகிறார்கள். ஆனால் முன்னர் கூறியது போன்று அதிவேகத்தில் செல்லக் கூடிய ஒரு வாகனத்தை எதிர்பாராத விதமாக சந்திக்கும் இத்தகைய தடைகள் மூலமாக முழுமையாக பழுதடைதலை போல வாழ்க்கை எனும் வண்டியில் பயணம் செய்யும் மனிதர்கள் பலர் அதிவேகமாக பயணம் செய்து எதிர்ப்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை எடுக்க முடியாமல் தோல்வியை சந்திக்கிறார்கள்.
Subscribe to:
Comments (Atom)